லூவர் அருங்காட்சியக்கொள்ளை : ஏழு சந்தேக நபர்களில் ஒருவர் விடுவிப்பு!!
1 கார்த்திகை 2025 சனி 16:10 | பார்வைகள் : 822
லூவர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரை வழக்குத் தொடராமல் விடுவித்துள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மற்ற சில சந்தேக நபர்கள் விசாரணையின் ஒரு பகுதியாக நீதிமன்றத்தின் முன் ஆஜராக்கப்பட்டு வருகின்றனர்.
திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 88 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் அவை இதுவரை மீட்கப்படவில்லை. கொள்ளை நடந்த நாளில் நால்வர் கொண்ட கும்பல் ஒரு உயர்த்தும் லாரியை பயன்படுத்தி அருங்காட்சியகத்தின் அபொல்லோ கேலரியிலுள்ள குரோன் நகைகள் வரை சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
லூவரின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டிருந்தாலும், கலாச்சார அமைச்சர் ரஷிதா தாத்தி இதை “பாதுகாப்பு குறைபாடு” எனக் கூறி புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan