Paristamil Navigation Paristamil advert login

பிரிகோஸின் மரணம் எழுப்பும் கேள்விகள்

பிரிகோஸின் மரணம் எழுப்பும் கேள்விகள்

6 புரட்டாசி 2023 புதன் 08:43 | பார்வைகள் : 3362


ரஷ்ய அர­சுக்கு எதி­ராகக் கலகக் கொடி உயர்த்தி செய்­தி­களில் இடம் பிடித்­தி­ருந்த வாக்னர் தனியார் இரா­ணுவக் குழுவின் தலைவர் யெவ்­கெனி பிரி­கோஸின் விமான அனர்த்தம் ஒன்றில் உயிரை விட்டு மீண்டும் தலைப்புச் செய்­தியில் இடம்­பி­டித்து விட்டார். ஆகஸ்ட் 23ஆம் திகதி மொஸ்­கோவில் இருந்து சென். பீற்­றஸ்பேர்க் நகரை நோக்கிப் போய்க் கொண்­டி­ருந்த விமானம் வீழ்ந்­ததால், விமா­னத்தில் பயணம் செய்த பிரி­கோஸின் உள்­ளிட்ட அனை­வ­ருமே மர­ணத்தைத் தழு­வி­ய­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் ஜூன் 23ஆம் திகதி பிரி­கோஸின் தலை­மை­யி­லான வாக்னர் குழு ரஷ்ய அர­சுக்கு எதி­ரான பிர­க­ட­னத்தை மேற்­கொண்­ட­துடன் மொஸ்கோ நகரைக் கைப்­பற்றப் போவ­தாக அறி­வித்து விட்டு அதற்­கான நகர்­வு­களை மேற்­கொண்ட போது உலக அரங்கில் மிகுந்த பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. உக்ரேன் போரில் ரஷ்­யா­வுக்கு ஆத­ர­வாக களத்தில் மிகவும் காத்­தி­ர­மான பங்கை ஆற்­றி­வந்த வாக்னர் குழு திடீ­ரென இத்­த­கைய ஒரு முடிவை எடுத்த போது அந்தச் செய்­தியை நம்­பு­வ­தற்கு பல­ருக்கும் கடி­ன­மாக இருந்­தது.

எனினும் பெலாரஸ் நாட்டின் தலைவர் அலெக்­சாண்டர் லுக­ஷென்கோ தலை­யிட்டு இரு தரப்­புக்கும் இடையே நடத்­திய பேச்­சு ­வார்த்­தை­களில் இணக்கம் காணப்­பட்­ட­துடன் கலகம் முடி­வுக்கு வந்­தது. கல­கத்தில் ஈடு­பட்ட வாக்னர் குழு உறுப்­பி­னர்­க­ளுக்குப் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­ட­துடன், பெலாரஸ் நாட்டில் அவர்­க­ளுக்கு அர­சியல் தஞ்­சமும் வழங்­கப்­பட்­டது. அவர்­க­ளோடு சேர்ந்து பிரி­கோ­ஸினும் நாட்­டை­விட்டு வெளி­யே­றுவார் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் அவர் தொடர்ந்தும் ரஷ்­யா­வி­லேயே தங்­கி­யி­ருந்தார். இந்­நி­லையில் ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புட்டின் அவரை நேரில் சந்­தித்துப் பேசி­ய­தாக ஒரு செய்தி வெளி­யாகி இருந்­தது.

இந்த நிலை­யி­லேயே குறித்த விமான அனர்த்தம் சம்­ப­வித்­தி­ருக்­கின்­றது. இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தலைப்புச் செய்­தி­களில் இடம் பிடித்­தி­ருக்­கிறார்.

விமா­னத்தில் வெடிப்பு ஒன்று நிகழ்ந்­த­தாக சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்கள் கூறி­யுள்­ளனர். பெரும்­பாலும் விமானம் சுடப்­பட்டு அல்­லது விமா­னத்தில் குண்டு வெடிக்க வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால், ரஷ்ய அரசுத் தரப்பில் இருந்து விமான விபத்­துக்­கான காரணம் தொடர்பில் இது­வரை தக­வல்கள் எதுவும் வெளி­யா­க­வில்லை. எனினும், சம்­பவம் தொடர்பில் பூரண விசா­ரணை நடத்­தப்­படும் என அறி­வித்­துள்ள ரஷ்யா, பெரும்­பாலும் இது சதி வேலை­யா­கவே இருக்கக் கூடும் என்ற சந்­தே­கத்­தையும் வெளி­யிட்­டுள்­ளது.

காரணம் எது­வாக இருந்­தாலும் இந்த அனர்த்தம் தற்­செ­ய­லான ஒன்­றல்ல என எழும் சந்­தேகம் நியா­ய­மா­னதே. சர்ச்­சைக்­கு­ரிய நப­ரா­கவும் அதே­நேரம் பலம்­மிக்க ஒரு தனியார் இரா­ணு­வத்தின் தலை­வ­ரா­கவும் விளங்கும் பெரும் செல்­வந்­த­ரான ஒருவர் திடீ­ரென விமான விபத்தில் சிக்­கு­வதை இல­கு­வாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

ரஷ்ய அரசுத் தலைவர் புட்­டி­னுக்கு எதி­ராக - சரி­யாகச் சொல்­வ­தானால் ரஷ்­யாவின் இரா­ணுவத் தலைமைப் பீடத்­துக்கு எதி­ராக - போர்க் கொடி உயர்த்­திய ஒருவர் திடீ­ரென விமான அனர்த்­தத்தில் மர­ணத்தைத் தழு­வி­யதால் அவ­ரது மர­ணத்தின் பின்­ன­ணியில் புட்டின் இருக்கக் கூடும் என்ற சந்­தேகம் எழு­வதும் நியா­ய­மா­னதே.

ஆனால், இதனால் அவ­ருக்கு என்ன இலாபம் இருக்கக் கூடும் அல்­லது பிரி­கோஸின் மர­ணத்தைத் தழு­வு­வதால் உண்­மையில் யார் யாருக்கு இலாபம் இருக்கக் கூடும் என்ற கேள்­வி­களை எழுப்­பு­வதன் ஊடாக உண்­மைக்கு அருகில் ஓர­ள­வேனும் செல்ல முடியும்.

ஒரு காலத்தில் புட்­டினின் சமை­யல்­கா­ர­ராக, மிகுந்த விசு­வா­சத்­துக்கு உரிய ஒரு­வ­ராக விளங்­கி­யவர் பிரி­கோஸின். புட்­டினின் நகர்­வு­களை ஓர­ள­வேனும் அவர் நிச்­சயம் அறிந்து வைத்­தி­ருப்பார்.

ஜூன் 23ஆம் திகதி நடை­பெற்ற சதி முயற்­சியின் பின்னர் - மன்­னிப்பு வழங்­கப்­பட்­டாலும் கூட - தனது பாது­காப்பு தொடர்பில் அதீத அக்­க­றையும் கவ­னமும் அவ­ருக்கு நிச்­சயம் இருந்­தி­ருக்கும். தனது பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக அவர் நினைத்­தி­ருந்தால் தனது முக்­கிய தள­ப­தி­க­ளுடன் விமானப் பய­ணத்­துக்குத் துணிந்­தி­ருப்­பாரா என்ற கேள்வி எழு­கி­றது.

தோல்­வி­ய­டைந்த சதி முயற்­சியைத் ொடர்ந்து புட்­டினை நேரில் சந்­தித்துப் பேசிய பின்னர் தனது பாது­காப்பு தொடர்பில் பிரி­கோஸின் ஏதோ­வொரு முடி­வுக்கு வந்­த­த­னா­லேயே அவர் ரஷ்­யாவில் சுதந்­தி­ர­மாக நட­மாடும் முடிவை எடுத்­தி­ருப்பார்.

அது மட்­டு­மன்றி அவர் அண்­மையில் ஆபி­ரிக்­கா­வுக்கும் சென்று வந்­தி­ருந்தார். அந்தப் பயணம் கூட ரஷ்ய அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கு உறு­து­ணை­யா­கவே அமைந்­தி­ருந்­தது.

நிலைமை இவ்­வாறு இருக்­கையில் பிரி­கோ­ஸின் மர­ணத்­துக்கு புட்டின் கார­ண­மாக இருந்­தி­ருப்பார் என்ற முடி­வுக்கு வரு­வது சிர­மமே. அது மாத்­தி­ர­மல்ல பிரி­கோ­ஸினை மர­ணிக்கச் செய்­வ­தற்கு புட்­டி­னுக்கு ஆயிரம் வாய்ப்­புகள் இருக்­கையில் எதற்­காக விமானம் வீழ்­வ­தற்­காக காத்­தி­ருக்க வேண்டும்.

பிரி­கோ­ஸினைக் கைது செய்து சிறையில் அடைத்­தால்­கூட இன்­றைய நிலையில் அதனைக் கேட்­ப­தற்கு ஆள் இல்லை. அது மாத்­தி­ர­மன்றி பிரி­கோஸின் ஆபி­ரிக்கா சென்­ற­போது கூட ஒரு விபத்தை ஏற்­ப­டுத்தி அவரைக் கொலை செய்­தி­ருக்க முடியும்.

ஆனால், எந்­த­வொரு முகாந்­தி­ரமும் இன்றி விபத்து தொடர்­பான செய்­திகள் வெளி­யா­கிய கையோடு மேற்­கு­லக ஊட­கங்கள் யாவும் விமான அனர்த்­தத்தின் பின்­ன­ணியில் புட்டின் இருப்­ப­தாக ஊகங்­க­ளையும், செய்­தி­க­ளையும் வெளி­யிடத் தொடங்­கி­விட்­டன. அதே­போன்று மேற்­கு­லக ராஜ­தந்­தி­ரி­களும், ஆய்­வா­ளர்­களும் தங்கள் பங்­குக்கு புட்­டினை நோக்கி தங்கள் விரல்­களை நீட்டத் தொடங்­கி­விட்­டனர். ஒரு­வ­கையில் பார்க்கும் போது இது ‘எங்­கப்பன் குதி­ருக்குள் இல்லை’ என்­கின்ற கதை­யாக இருக்­குமோ என்ற சந்­தேகம் எழு­வதைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

வாக்னர் குழு­வி­னரைப் பொறுத்­த­வரை அவர்கள் உக்ரேன் கள­மு­னையில் உக்ரேனியப் படை­யி­ன­ருக்கு பலத்த சவா­லாகத் திகழ்ந்து வரு­கின்­றனர். அதே­போன்று உலகின் பல நாடு­களில் குறிப்­பாக ஆபி­ரிக்­காவில் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லகின் ஏகா­தி­பத்­திய முயற்­சி­க­ளுக்குப் பலத்த தடை­யா­கவும் விளங்கி வரு­கின்­றனர். அந்த வகையில் வாக்னர் குழுவை ஒடுக்க வேண்­டிய தேவை மேற்­கு­ல­கிற்கே அதிகம் உள்­ளதை உணர முடி­கின்­றது.

ஒரு வகையில் உக்ரேன் போரிலும், உல­க­ளா­விய அடிப்­ப­டையில் ரஷ்யா மேற்­கொண்­டு­ வரும் பல அர­சியல் நகர்­வு­க­ளுக்கும் வாக்னர் குழு­வி­னரின் உதவி ரஷ்ய அரசுத் தலை­மைக்குத் தேவைப்­ப­டு­கின்­றது. எனவே, தனக்கு மிகவும் தேவைப்­படும் ஒரு சக்­தியை தானே அழித்­துக்­கொள்ள ரஷ்யா முனையும் என எதிர்­பார்ப்­பது அறி­வி­ழிவு.

ஆனால் மறு­புறம், ஜூன் 23இல் பிரி­கோஸின் புட்­டி­னுக்கு எதி­ராகப் போர்க்­கொடி உயர்த்­திய போது பெரிதும் மகிழ்ச்சி அடைந்த உக்­ரேனும், அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­ல­கமும் தமக்குச் சார்­பாக அவரைப் பயன்­ப­டுத்திக் கொள்ள பெரிதும் முயன்­றன. அவ­ரது சதி முயற்­சியைக் கொண்­டாடித் தீர்த்­தன.

ஆனால் எதிர்­பார்த்­த­வாறு நடை­பெ­றாமல் போனது மட்­டு­மன்றி எதிர்­பார்ப்­புக்கு மாறா­கவே காரி­யங்கள் நடந்­தே­றின.

கள முனையில் ரஷ்யப் படை­களைக் குறிப்­பாக அவர்­க­ளுக்கு ஆத­ர­வாகப் போரிடும் வாக்னர் குழு உள்­ளிட்ட தனியார் இரா­ணு­வங்­களை எதிர்­கொள்ள முடி­யாமல் திணறும் உக்­ரரேனும், அதன் பின்­ன­ணியில் செயல்­படும் நேட்­டோவும் பிரி­கோ­ஸினை களத்தில் இருந்து அகற்றும் முடிவை எடுப்­பது ஒன்றும் ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மல்ல.

பிரி­கோ­ஸினின் மரணம் தொடர்­பாக அமெ­ரிக்க தேசிய பாது­காப்புக் கவுன்­சிலின் முன்னாள் அதி­கா­ரி­யான அலெக்­சாண்டர் வின்ட்மான் இவ்­வாறு எழு­தி­யி­ருந்தார். 'இந்தப் படு­கொலை உக்­ரேனில் சமா­தா­னத்தைத் துரி­தப்­ப­டுத்தும். போரின் உக்­கி­ரத்தைக் குறைக்கும்.'

உக்­ரரேனில் நேட்டோ ஆத­ரவு சிந்­த­னை­யாளர் குழா­மான ட்ரான்ஸ் அத்­தி­லாந்திக் டயலொக் சென்­ரரின் தலை­வ­ரான மெக்சிம் ஸ்கிறிப்­சென்கோ பின்­வ­ரு­மாறு எழு­தி­யி­ருந்தார். 'உண்­மையில் இந்த யுத்தப் பிர­புவின் மரணச் செய்தி உக்­ரே­னுக்கு மிகவும் நல்­லது. பிரி­கோஸின் மற்றும் அவ­ரது வல­து­க­ர­மான டிமித்ரி உக்ரின் ஆகி­யோரின் மரணங்கள் எதிர்வரும் காலங்களில் போர்க் களத்தில் உக்ரேன் படையினின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.'

இவற்றைப் போன்ற பல்வேறு கருத்துக்கள் மேற்குலக ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன. அவற்றின் வழி பார்க்கும் போது இந்த மரணம் மேற்குலகிற்கே அதிக நன்மை பயக்கக் கூடியது எனப் புரிகின்றது.

சரச்சைக்குரிய நபர்களின் இதுபோன்ற மரணங்கள் பல இன்னமும் கூடப் புரியாத புதிர்களாகவே உலகம் முழுவதிலும் வலம்வந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். பிரிகோஸினின் மரணம் கூட அவ்வாறு அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் யாராகவும் இருக்கட்டும். ஆனால், தற்போதைய நிலையில் அவரது மரணத்தால் அதிகம் நன்மையடையும் வாய்ப்பு மேற்குலகிற்கே உள்ளதாகத் தெரிகிறது.

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்