Paristamil Navigation Paristamil advert login

யாழில் உயிரிழந்த மாணவனுக்கு உயர்தரத்தில் கிடைத்த பெறுபேறு - கவலையில் குடும்பம்

யாழில் உயிரிழந்த மாணவனுக்கு உயர்தரத்தில் கிடைத்த பெறுபேறு - கவலையில் குடும்பம்

6 புரட்டாசி 2023 புதன் 14:43 | பார்வைகள் : 3973


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில்  2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று , உயர்தர பரீட்சை எழுதி விட்டு , பெறுபேறுக்காக காத்த்திருந்தார்.

இந்த வேளை விபத்தில் சிக்கி கடந்த 08ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

அந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரிழந்த மாணவன் , 2ஏ , பி பெறுபேறு பெற்று , மாவட்ட மட்டத்தில் 97ஆவது தரத்தையும் பெற்றுள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்