Paristamil Navigation Paristamil advert login

எகிப்தில்  கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி!

எகிப்தில்  கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி!

7 புரட்டாசி 2023 வியாழன் 08:47 | பார்வைகள் : 4159


எகிப்து தலைநகர் கெய்ரோவில்  4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் ஹெடிக்யு எல்-கிய்பா என்ற மாவட்டத்தில் 09-06-2023 இல் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த கட்டிட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 

மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்