Paristamil Navigation Paristamil advert login

விஞ்ஞானிகளுக்கு விளங்காத விண்வெளி ரகசியம்

விஞ்ஞானிகளுக்கு விளங்காத விண்வெளி ரகசியம்

14 சித்திரை 2014 திங்கள் 13:06 | பார்வைகள் : 10300


சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் வான்வெளி வீரர்கள், தங்களுடன் வான்வெளிக்கு செர்ரி பழ விதைகளை கொண்டு சென்றனர்.

வான்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் அந்த விதைகள் 8 மாதங்களாக வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் அவற்றை ஜப்பானுக்கு கொண்டு வந்து ஒரு தோட்டத்தில் நட்டனர்.

பொதுவாக செர்ரி மரங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் பூக்கத்தொடங்கும். ஆனால் வான்வெளிக்கு சென்று திரும்பிய செர்ரி விதை மூலம் வளர்ந்த மரங்கள், 4 ஆண்டுகளிலேயே பூக்கத்தொடங்கி விட்டன.

அந்த மரங்கள் எவ்வாறு 6 ஆண்டுகளுக்கு முன்பே பூக்கத்தொடங்கின என்பது புரியாத புதிராக இருப்பதாக வான்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்