Paristamil Navigation Paristamil advert login

திருகோணமலையில் இசை நிகழ்ச்சியில் மோதல் - ஐவர் படுகாயம்!

திருகோணமலையில் இசை நிகழ்ச்சியில் மோதல் - ஐவர் படுகாயம்!

8 புரட்டாசி 2023 வெள்ளி 06:09 | பார்வைகள் : 4681


திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோதலில் காயமடைந்த ஐவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் யுவதி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்