Paristamil Navigation Paristamil advert login

பிரேசிலில் பெரும் புயல்...  31 பேர் பலி

பிரேசிலில் பெரும் புயல்...  31 பேர் பலி

8 புரட்டாசி 2023 வெள்ளி 08:31 | பார்வைகள் : 3919


பிரேசில் கடந்த திங்கட்கிழமை இரவு  பெரும் புயல் தாக்கியது.

அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன.

குறித்த புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அந்த  வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. 

அங்கு ஒரே வீட்டில் 15 பேரின் உடல்களை மீட்புப் படை வீரர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

புயலில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் 2300 பேர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்