Paristamil Navigation Paristamil advert login

பூமி மற்றும் நிலவின் புகைப்படம் - ஆதித்யா எல்-1

பூமி மற்றும் நிலவின் புகைப்படம் - ஆதித்யா எல்-1

8 புரட்டாசி 2023 வெள்ளி 09:19 | பார்வைகள் : 2405


சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் பூமி மற்றும் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

கடந்த 2-ம் திகதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் கடந்த 3 ஆம் திகதியும், 2-ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் கடந்த 5-ம் தேதியும் வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது.

3-ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வரும் 10-ம் திகதி அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், செல்ஃபியுடன், பூமியையும், சந்திரனையும் ஆதித்யா எல்1 புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

கடந்த 4-ம் திகதி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்