Paristamil Navigation Paristamil advert login

மன்னாரில் கரைதட்டிய கப்பல் - தீவிர விசாரணையில் கடற்படையினர்

மன்னாரில் கரைதட்டிய கப்பல் - தீவிர விசாரணையில் கடற்படையினர்

9 ஆடி 2023 ஞாயிறு 00:00 | பார்வைகள் : 4902


மாலைதீவிலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த கப்பல் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மன்னார் பேசாலைப் பகுதியில் கரைதட்டியுள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான குறித்த கப்பல், நேற்று மாலை பேசாலைப் பகுதியில் கரைதட்டியுள்ளது.

அந்தக் கப்பலில், 11 பணியாளர்கள் உள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து, கடற்படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த கப்பல் கடற்படையால் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்