Paristamil Navigation Paristamil advert login

இதிலும் சிக்கனம் வேண்டும்!

இதிலும் சிக்கனம் வேண்டும்!

14 ஐப்பசி 2013 திங்கள் 11:40 | பார்வைகள் : 9755


 பணவீக்கம் அதிகரித்து வரும் இன்றைய நிலையில், சிக்கனம் அதிகம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் சிக்கனம் என்றால் சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றிப் பாருங்கள்,நிறைய பணத்தைச் சேமிக்கலாம்... 

 
* சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஆத்திர அவசரத்துக்கு ஓட்டலை நாட வேண்டியதில்லை. 
 
* வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைத்துப் பராமரியுங்கள். வீட்டுக்கான காய்கறிகள் கிடைக்கும். 
 
* வெளியில் உணவு உண்ணுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலைக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்லுங்கள். 
 
* சோடா மற்றும் குளிர்பானத்தைத் தவிர்த்து தண்ணீரை அருந்துங்கள். அது உடலுக்கும் நல்லது. 
 
* அருகாமையில் தோட்டம், பண்ணை இருந்தால் அங்கு சென்று பழங்கள், காளான் போன்றவற்றை வாங்குங்கள். அவை புத்தம் புதிதாகவும், விலை குறைவாகவும் இருக்கும். 
 
* மீன் பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அது நல்ல பொழுதுபோக்காகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். 
 
* நொறுக்குத் தீனி, துரித உணவுகளைக் குறையுங்கள். 
 
* மதுபானங்களைத் தவிருங்கள். 
 
* முடிந்தால் சைவ உணவுக்கு மாறிவிடுங்கள். இறைச்சி, கடல் உணவுகள் பொதுவாக விலை கூடியவை. 
 
* சுற்றுலா செல்வதானால் உணவையும், தண்ணீரையும் நீங்களே எடுத்துச் செல்லுங்கள். 
 
* தேவைக்கு அதிகமாகச் சமைக்காதீர்கள். உணவை வீணாக்காதீர்கள், கொட்டாதீர்கள். 
 
* சத்துள்ள, தரமான உணவாக வாங்குங்கள். 
 
* பாட்டில் தண்ணீரை தவிர்க்கலாம். தேவைப்பட்டால் தண்ணீரைச் சுடவைத்து அல்லது வடிகட்டிக் குடியுங்கள். 
 
* அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுப்பொருட்களை வாங்குங்கள். அவை விலை மலிவாக இருக்கும். 
 
* உள்ளூர் உணவுகளை வாங்குங்கள். முடிந்தால் மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வாங்குங்கள். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்