புன்னகைக்கும் பூக்கள்

14 மார்கழி 2022 புதன் 14:04 | பார்வைகள் : 12195
புன்னகைக்கும் பூக்கள் பொதிந்திருக்கும் சோகங்கள்
மலர் அங்காடிகளோ
கோபுரத்து வாசல்களோ
வாசம் வீசும்
வண்ண மலர்கள்
புன்னகையுடன்
காட்சி தருகிறது
அதன் புன்னகையின்
பின்னுள்தான்
எத்தனை சோகங்கள்
விடிந்தும் விடியாத
பொழுதில்
கிடைக்கும் கூலிக்காக
பறித்து களைக்கும்
ஏழைகள் கூட்டம்
அதில் சிறு குழந்தைகளும்
அடக்கம்
பறித்த மலர்களை
அடித்து பேசி
விவசாயிடம் வாங்கி
செல்லும் வியாபார
தந்திரம்
வாங்கிய மலர்களை
பிரித்து சிறு
வியாபாரிகளுக்கு
வழங்கும் அவசரம்
அவர்களுக்கோ
மாலை மங்குமுன்
மலர்களின் மரணத்திற்கு
முன்
நம்மை வாங்க
வைக்க நிர்பந்தம்
வண்ண வண்ணமாய்
மலர்கள் புன்னகையுடன்தான்
நமக்காக
காத்திருக்கின்றன
அதன் புன்னகைக்கு
பின்னே
விவசாயி தொழிலாளி
வியாபாரிகளின்
சோக போராட்டங்களை
உள்ளுக்குள் வைத்தபடி
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025