Paristamil Navigation Paristamil advert login

பூ பூத்த மர்மம்

பூ பூத்த மர்மம்

1 புரட்டாசி 2022 வியாழன் 14:34 | பார்வைகள் : 8513


பூ பூத்த மர்மம்
 
காற்று பலமாகத்தான்
 
வீசி கொண்டிருக்குகிறது
 
அருகருகே பூத்து
 
குலுங்கிய
 
இரு மரங்கள்
 
தங்கள் தலையை
 
ஆட்டியபடி
 
இரகசியம் பேசி
 
கொண்டிருக்கின்றன
 
 பக்கத்தில் படர்ந்திருந்த
 
கொடி ஒன்று
 
ஒட்டு கேட்க
 
ஆசை பட்டு
 
மரத்தின் மேல்
 
படர்ந்து
 
காதை வைத்து
 
கேட்டவுடன்
 
வெட்கம் தாளாமல்
 
தலை குனிந்து
 
இடை நழுவி
 
மரத்தின் பிடி
 
விட்டு விழுந்தது
 
கொடி வெட்கப்படும்படி
 
மரங்கள்
 
என்ன பேசி
 
கொண்டிருந்ததோ ?
 
இரசமான
 
விசயமாய்
 
இருக்கவேண்டும்,
 
ஒரு வேளை
 
தான் எப்படி
 
பூ பூத்தவளானேன்
 
என்று பேசியிருக்குமோ !
 
ஏனெனில்
 
கொடி இரண்டு
 
மூன்று நாட்களில்
 
பூத்து
 
குலுங்க ஆரம்பித்து
 
விட்டதே…!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்