இழப்பின் கண்ணீர்

20 மாசி 2021 சனி 06:28 | பார்வைகள் : 14360
என்னை மயானத்தில்
மாடு மேய்க்க விட்டுவிட்டு
குடமுழுக்கு தீர்த்தத்தில்
குளிக்கிறது உன் கூந்தல்
என் நிழலும் போதையில் தள்ளாட
உன் உலகம் புது உறவில் கொண்டாடுது
தென்றல் ரசித்த என் ஜன்னல்
புயலில் சிக்கி புலம்புகிறது
பூமியின் சுழற்சியே அறியாமல்
உன் பூவிழியில் தொலைந்த என் நாட்கள்
என் இதயக் குடுவையின் முழுப்பரப்பிலும்
உன் நினைவுக்கு கூடுகள் மூச்சடைக்குது
கட்டுப்பாடின்றி உன்மேல் வைத்த அன்பு
இன்று என் கட்டளைகளை காலால் உதைக்கிறது
நடைப்பிணமாக நான் நடக்க
அலங்காரங்களுடன் அங்கு ஆரவாரம் ஆர்ப்பறிக்குது
பிணமாகும் வரை இனி புலம்பல் தான் என் தாய் மொழியோ ?
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025