Paristamil Navigation Paristamil advert login

உன் குரல் கேட்டால்....

உன் குரல் கேட்டால்....

13 மாசி 2021 சனி 06:09 | பார்வைகள் : 9805


வட்டமிடும்

 
வண்டின் ஓசை
 
மலருக்குக் கேட்கிறது !
 
கரையில் தவழும்
 
அலைகளின் ஓசை
 
கடலுக்குக் கேட்கிறது !
 
வானில்
 
இடி இடிக்கும் ஓசை
 
பூமிக்குக் கேட்கிறது !
 
வீழும்
 
அருவியின் ஓசை
 
பாறைக்குக் கேட்கிறது !
 
வீசும்
 
தென்றலின் ஓசை
 
தென்னைக்குக் கேட்கிறது !
 
மீட்டும்
 
வீணையின் நாதம்
 
விரலுக்குக் கேட்கிறது !
 
அழும்
 
குழந்தையின் குரல்
 
அன்னைக்குக் கேட்கிறது !
 
உன் குரல் கேட்டு
 
அவன் இதயத்தில்
 
ஒலிக்கும் காதல் கீதம்
 
உனக்குக் கேட்கவில்லையா ?
 
உன் குரல் கேட்டால்
 
அவன் இதழ்களே
 
இன்னிசைக் குரல் எழுப்புகிறது !   
 
தனிமையில் அமர்ந்து 
 
அமைதியுடன் இதயத்தில்
 
உன் குரலைக்  கேட்டுப்பார்
 
உலகமே வசப்படும்
 
மனிதநேயம் ஒலிக்கும் !

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்