மழை

3 கார்த்திகை 2020 செவ்வாய் 15:29 | பார்வைகள் : 13026
ஒருவேளை
மழையின் துளிகளுக்குள்
நெருப்புக்கரு ஒளிந்திருக்குமோ?
புகையோடு விழுகிறதே
வாழ்க்கையின் மிகமெல்லிய
தடங்களில் நடந்து பார்க்கிறேன்
மழை நோக்கும்போது
முகஸ்துதி செய்வதில்லை
ஒருபோதும் மழை
சில நிமிடங்களில்
இதயத்தினூடே
இனிக்கும் உணர்ச்சிகள்
முகில் பூப்பூக்கையில்
நகைக்கத் தோன்றுகிறது
மழைத் தூரலுக்குக் குடைதேடும்
மனிதர்கள் காணும்போது
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025