Paristamil Navigation Paristamil advert login

தாய்...!!

தாய்...!!

28 ஐப்பசி 2020 புதன் 14:23 | பார்வைகள் : 9697


கருக்கொண்ட நாள்தொடங்கி கண்ணேபோல் காத்துக்

குறுக்கிப் படுக்காமல் கொண்டு - பெருக்கும்
வயிற்றுச் சுமைதாங்கி வாடி வதங்கி
உயிராக்கி ஈன்றாள் உனை.
 
பெற்றுப் புறந்தந்து ஈயெறும்பு தீண்டாது
மற்றுள்ள நாட்டம் மறந்தவளாய் - நற்றாயாய்க்
கண்விழித்துக் கையணைத்துக் காலத்தே பாலூட்டிப்
பண்பாடிப் பாராட்டி னாள்.
 
புகழ்பாடிப் போற்றஅருஞ் சொற்கோவை போதா
மகிழ்ந்தால் மகிழ்கின்றாள் மக்கள் - நெகிழ்ந்தால்
நெகிழ்கின்றாள் நெஞ்சத்தில் பிள்ளை நினைவாய்த்
திகழ்கின்றாள் தீதறியாள் தாய்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்