Paristamil Navigation Paristamil advert login

மனைவி

மனைவி

6 புரட்டாசி 2020 ஞாயிறு 17:47 | பார்வைகள் : 9370


இறை மழை சாரலில்,
இல்லதரசியாக மலர்ந்த புதிய மலர்;
 
வாசல் இல்லா வானத்தில்,
அன்புகரசியாக வந்த அன்பு மலர்;
 
காலங்களில் நான்களிலும்,
தீர்க்கதரிசியாக வந்த வாடா மலர்;
 
தாயின் மறு உருவத்தில்,
அன்பின் அரிச்சுவடியை, கொடுத்த தாய் மலர்;
 
கள்ளமில்லா கடமையை, தந்தையின் மறு உருவத்தில்,
காட்டிய தந்தை மலர்;
 
உறவு இல்லா நட்பு, உறவாக வந்தவை,
உறவாக வந்து நட்பாக வாழும் நட்பு மலர்;
 
முக்கடல் கூடும் சங்கமம்,
தாய்,  தந்தை, நட்பு இவை முன்றும் பெற்ற சங்கம மலர்;
 
என் பிள்ளையை ஈன்று,
என்னை ஈன்றவறின் தியாகத்தை உணரவைத்த தியாக மலர்;
 
எங்கள் இல்லத்தின் இருளை போக்கும், ஒளி மலர்;
 
அன்பின் கரங்களில் இவ்வுலகம்,
உன் கரங்களில் என்றுமே எங்கள் உலகம்,
 
நீயே எங்களை காக்கும் தெய்வ மலர்!.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்