Paristamil Navigation Paristamil advert login

தெய்வ நம்பிக்கை

தெய்வ நம்பிக்கை

21 மாசி 2022 திங்கள் 09:39 | பார்வைகள் : 13405


எதிர்பாராச் சூழல், எதிர்காலம் தாங்கும்

 
புதிர்விடை யார்க்குப் புதிர்பின் விடைமுன்.
 
நிகழ்பவை யாவுமே நேற்று நிகழ்வின்
 
தகவல் சுமந்திருக்கும், தப்பினால் நாளை
 
நிகழ்வின் அறிகுறி; நீயே கதியெனத்
 
தெய்வ நினைவில் செயல்படும் யாவரும்
 
செய்யும் செயல்கள் திருத்தமாய் செய்ய
 
உணர்வால் உணர்த்துவார் உள்நின்று காக்கும்
 
உணர்வு மொழியில் உரையாடும் அப்பன்.
 
திடமாக நம்பினால், தெய்வ மடியில்
 
கிடக்கும் மழலை வாழ்வு.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்