Paristamil Navigation Paristamil advert login

தாயே...!!!

தாயே...!!!

31 வைகாசி 2021 திங்கள் 13:12 | பார்வைகள் : 10013


நினைவில் உன்முகம் 

 
மறந்தேன் - தாயே
 
கனவிலாவது வந்துவிடு!
 
மீண்டும் ஒருமுறை 
 
வாழ்ந்திட வேண்டும் - உன்
 
மடியில் எனக்கு 
 
மரணமும் வேண்டும்.
 
கைகள் பிடித்து நடந்த
 
காலங்கள் மறந்தேன் - என்
 
கண்ணீர் துடைத்த 
 
கைகளையிழந்தேன்
 
எத்தனை பிறவிகள் 
 
எடுப்பினும் 
 
அத்தனை பிறவியும் 
 
தாயாக வந்துவிடு...
 
அரை தசாப்தம்
 
ஆகியும் கூட - நேற்று
 
வாழ்ந்தாற்போல்
 
இன்னும் நெஞ்சில் 
 
சில நினைவுகள்....
 
வீட்டு முற்றத்தில்
 
நிலாச் சோறு.......
 
பட்டு மடியில்
 
தாலாட்டு....
 
செல்லம் என்ற 
 
சிறு அணைப்பு.....
 
சில சமயம் - நீ
 
அருகிலிருப்பதாய்
 
உணர்கிறேன் - என்
 
கண்கள் திறக்க மறுக்கின்றேன்
 
மற்றவர் இல்லை - தாயே!
 
பெற்றவள் உன் 
 
தூய அன்புக்கு நிகர்.....

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்