இலங்கையில் மேலும் ஒரு பேருந்து விபத்து - 2 பேர் பலி - 29 பேர் படுகாயம்
10 ஆடி 2023 திங்கள் 01:29 | பார்வைகள் : 15664
குருநாகல் - அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கூரகல யாத்திரை சென்று மீண்டும் வீடு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan