யாரோ ஒருவள் !

23 மார்கழி 2018 ஞாயிறு 16:15 | பார்வைகள் : 13005
உன் காலடி மண்ணை
உள்ளங்கையில் பிடித்து - என்
உயிருக்குள் தூவுமளக்கு
உன் மேல் காதலில்லை எனக்கு...!
பேருந்து நிறுத்தம்,
கடைத்தெரு என - நீ
போகும் இடங்களில்
காத்திருக்கவும் விருப்பமில்லை எனக்கு...!
எதிர்படும் உன்னை
என் விழிகளாலே வீழ்த்தும்
எண்ணமில்லை எனக்கு...!
பக்கத்தில் நீ வந்தால்
படபடக்கவும் இல்லை...!
தூரத்தில் நீ போனால் - நான்
துயரம் கொள்ளவும் இல்லை...!!
கனவுகளில் நீ வருவதில்லை...!
காலையின் முதல் நினைவும் நீயில்லை...!!
என்றாவது நீ
என் கண்ணில்பட்டு மறையும்போது,
இன்னொருமுறை பார்க்க - என்
இருவிழிகள் தேடும்
யாரோ ஒருவள் நீ...!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025