Paristamil Navigation Paristamil advert login

யாரோ ஒருவள் !

யாரோ ஒருவள் !

23 மார்கழி 2018 ஞாயிறு 16:15 | பார்வைகள் : 9508


உன் காலடி மண்ணை

உள்ளங்கையில் பிடித்து - என்
உயிருக்குள் தூவுமளக்கு
உன் மேல் காதலில்லை எனக்கு...!
 
பேருந்து நிறுத்தம்,
கடைத்தெரு என - நீ
போகும் இடங்களில்
காத்திருக்கவும் விருப்பமில்லை எனக்கு...!
 
எதிர்படும் உன்னை
என் விழிகளாலே வீழ்த்தும்
எண்ணமில்லை எனக்கு...!
 
பக்கத்தில் நீ வந்தால்
படபடக்கவும் இல்லை...!
தூரத்தில் நீ போனால் - நான்
துயரம் கொள்ளவும் இல்லை...!!
 
கனவுகளில் நீ வருவதில்லை...!
காலையின் முதல் நினைவும் நீயில்லை...!!
 
என்றாவது நீ
என் கண்ணில்பட்டு மறையும்போது,
இன்னொருமுறை பார்க்க - என்
இருவிழிகள் தேடும்
யாரோ ஒருவள் நீ...!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்