Paristamil Navigation Paristamil advert login

பயமறியாதவள்!

பயமறியாதவள்!

29 ஐப்பசி 2018 திங்கள் 13:19 | பார்வைகள் : 9786


அது ஒரு
அமாவாசை இரவு...!
 
ஒளி தின்னும்
இருள் மிருகம்
நடமாடிக்கொண்டிருக்கிறது...!
 
காற்றே இல்லை...!
ஆனாலும்
தெருமுனையில்
ஒரேயொரு மரம் மட்டும்
பெரும் சத்தத்தோடு
அசைந்துகொண்டிருக்கிறது...!
 
மின்னல்களே இல்லா
இடிச்சத்தங்கள்
இரு காதுகளையும் பிளக்கிறது...!
 
நாய்களெல்லாம்
நரிகளைப்போல
ஊளையிடுகிறது...!
 
இரும்பு சங்கிலிகளை யாரோ
இழுத்துக்கொண்டு நடப்பதுபோல்,
இடையிடையே
இன்னுமொரு சத்தம்...!
 
ஆந்தைகள் இரண்டு
அலறிக்கொண்டிருக்க,
வவ்வால் கூட்டமொன்று
சிறகு விரித்து பறக்கிறது...!
 
சருகுகளில் சலனம்...!
 
வெள்ளை ஆடைகட்டி
வெளிச்சமில்லா விளக்கொன்றுடன்
தூரத்தில் யாரோ...
 
கரும்பூனையொன்று
வீட்டு சுவரை
நகங்களால் கிழிக்கிறது...!
 
இரவு கொடூரமாய் நீள்கிறது...!
 
ஆனால்
அவள் மட்டும்
பயமில்லாமல் 
நடமாடிக்கொண்டிருக்கிறாள்...!
உறங்கிக்கிடக்கும்
என் கனவுகளில்...

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்