Paristamil Navigation Paristamil advert login

முதல் தனிமை ...!!

முதல் தனிமை ...!!

19 ஆவணி 2018 ஞாயிறு 14:49 | பார்வைகள் : 9749


தனிமை
இனிமையென சிலர் சிரிப்பர்
கொடுமையென பலர் அழுவர்
ஆன்மீக அன்பர்கள்
சிரித்துக்கொண்டே அழுது
புதுமையென பதுமையாக நிற்பர்!
 
அன்றில் பறவைகள்போல்
இன்பமுடன் பறந்து
திரிந்த காதலர்கள்...
பிரிந்ததுமுதல் தனிமையில்
சிறகொடிந்த பறவைபோல்
 
துன்பத்தில் வீழ்ந்தனர் !
பள்ளி கல்லூரிச்சாலையில்
படித்துப் பழகி மகிழ்ந்த
பிரியாத மாணவ நண்பர்கள்
பிரிந்த நாள்முதல் தனிமையில்
 
திக்குத்தெரியாத காட்டில்
நிற்பதுபோல் தவித்து நின்றனர் ! 
திருமணம் முடிந்த
பாசமிகு பெண்மகள்
புகுந்த வீடு சென்ற நாள்முதல் 
பாசத்துக்காக ஏங்கி
 
தனிமையில் தாய் தந்தை
தவித்து நின்றனர்!   
பரபரப்பான
பக்தர்கள் கூட்டத்தில் 
அருள்வாக்கு அளித்த துறவி
 
இமயம் அடைந்த நாள்முதல்
தனிமையில் அமைதி உணர்ந்தார் !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்