பாதை !

16 ஐப்பசி 2019 புதன் 16:49 | பார்வைகள் : 12814
என் கைகளை பிடித்தே
நடந்துகொண்டிருந்தாய் நீ...!
உன் பாதைகள்தான்
எனக்கும் பாதைகளானது...!
உன் பயணங்கள்தான்
என்னுடைய பயணமும்...
இன்று...
என் கைகளை
எனக்கே தெரியாமல்
உதறிவிட்டு
உனக்கான பாதைகளில்
பயணிக்கிறாய் நீ...!
நீ விட்டுச்சென்ற
அதே இடத்தில்
அழுதுகொண்டே நிற்கிறேன் நான்...!
நீயோ தனியாக
தவறான பாதையில்
தவறி சென்றுகொண்டிருக்கிறாய்...!
தவறான அந்த பாதையில்,
நீ எவ்வளவு பயணித்திருந்தாலும்
பரவாயில்லை எனக்கு...!
திரும்பி மட்டும் வந்துவிடு...!
ஏனென்றால்...
எனக்கான பாதையும்,
பயணமும் நீயே...
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025