Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கோர விபத்து - அதிகரிக்கும் மரணங்கள்

இலங்கையில் கோர விபத்து - அதிகரிக்கும் மரணங்கள்

10 ஆடி 2023 திங்கள் 05:06 | பார்வைகள் : 4737


பொலனறுவை – மன்னம்பிட்டிய கொட்டலிய பாலத்தில் ஆற்றில் கவிழ்ந்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் விபத்தில் காயமடைந்த 41 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சம்பத் இந்திக்க தெரிவித்தார்.

அத்துடன் மன்னம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கதுருவலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே கொட்டலிய பாளத்தில் மோதி கொட்டலிய ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் அதில் 67 பேர் வரை பயணித்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்