Paristamil Navigation Paristamil advert login

நெஞ்செல்லாம் நீ

நெஞ்செல்லாம் நீ

10 கார்த்திகை 2016 வியாழன் 23:01 | பார்வைகள் : 10151


 காலங்கள் கடந்தாச்சு 

கனவுகள் கலைந்தாச்சு 
நினைவுகள் மட்டும். .....!
நீங்கவில்லை
உனக்கும் எனக்கும் 
உள்ளது நட்ப்போ...?
இல்ல. .......!
சொல்ல தெரியல
புரியாமல் போனாயோ 
புதிர் போடுகின்றாயோ
பதிலேதும் சொல்லாது - நீ 
பயணித்தது எங்கே.
விழி  மூடி தூங்கும் போது 
விடைதேட துடிக்கிறது 
இதயம்......! ஆனால் 
மௌனம் கொண்ட மனமோ 
தனக்குள் உன் நினைவை 
நிலைநாட்ட பார்க்கிறது.
கனவாகிப்போன காலமாக 
கலைத்து விட முடியவில்லை 
நிலையாய் என்றும் - நீ 
நிலை கொண்டாய் என்னுள்
வரமாக எண்ணுகிறேன் - நீ 
சுயம் வரம்தான் என்றும்
 
-றொபின்சியா

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்