Paristamil Navigation Paristamil advert login

மரணம்..!

மரணம்..!

10 மார்கழி 2015 வியாழன் 23:24 | பார்வைகள் : 10335


 நல்லவன் கெட்டவன்

என்றாலும்
மனித  வாழ்க்கையின்
கடைசி பக்கத்தில் 
இறைவன் எழுதுவது 
மரணம் பக்கம்
 
வாழும் போது யாரும்
விரும்பி பார்க்க தோன்றாத
பக்கம்- மாந்தன் மறந்து
இருந்தாலும் மனிதன் 
ஞான அறிவு பெருவது
மரண பக்கத்தில் வரும் போது
சொந்தங்கள் பிரிந்து இருந்தாலும் 
உறவுகளை ஒன்றிணைப்பது மரணம்
 
மாறாத கோபம் .
மாறாத பகை என்றாலும் 
மனிதர்களின் மனம்
திருந்துவது மரணத்தில் 
இருப்பவன் ஆனாலும்
இல்லாதவன் ஆனாலும் அவர்களின் 
ஆசைகள் நிறைவு
அடைவது  மரணத்தில்
 
மரணம் வரும் போதுதான்
வாழ்வின் எல்லா நிறங்களும் 
வலு இழக்கும் இது தான்
இறைவனின் விளையாட்டு..
 
- கலையடி அகிலன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்