Paristamil Navigation Paristamil advert login

இரை தேடும் பறவை....!!

இரை தேடும் பறவை....!!

17 ஆனி 2018 ஞாயிறு 14:38 | பார்வைகள் : 9778


இறைவன் அளித்ததோ 

இரு இறக்கைகள்
பறக்கத் தெரிந்தபின் 
சிறகடித்து
பறப்பதோ பல காததூரம் !
 
கூட்டிலே .....
முடங்கிக் கிடக்கவில்லை
குஞ்சுக்கு பசியாற்ற 
கொஞ்சமும் சலிக்காமல் 
பறக்கிறது பறவை 
இரை தேடும் பறவை !
 
சோம்பேறிகளே... 
கடவுள் அளித்த 
கை கால்கள் நன்கு
இயங்கிய பின்னும்
ஓடி உழைக்காமல் 
இச்சையுடன் 
பிச்சையெடுக்கிறாயே !
 
சோம்பேறிக் கூட்டங்களே....
கரை தேடும் அலைகள்போல்
இரை தேடும் பறவைகளை
விண்ணிலே ஊன்றி கவனி 
உழைத்து வாழ நினை 
உயரும் உன் நிலை !
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்