Paristamil Navigation Paristamil advert login

இயைந்த நிலை...!

இயைந்த நிலை...!

14 மாசி 2018 புதன் 14:49 | பார்வைகள் : 14227


அடுத்து வரப்போகும் 
குளிர்காலத்துக்கான எரிபொருளாக 
இப்போது உதிரும் இலைகளையே சேமிக்கிறேன். 
 
ஒடிந்து விழுந்த சின்னஞ்சிறு 
விறகுகள் தவிர்த்து 
மரங்களின் கிளைகளில் 
கத்தி வைத்துவிடாதவனாக என்னை 
இந்த இயற்கையின் முன் 
விசுவாசத்தோடு இருக்கவிடுகிற 
சாத்தியங்களை யாசிக்கிறேன்.
 
நிறைய மலர்களோடு வரவிருக்கும் 
வசந்த காலத்திற்கு 
கிளைகளுடன் கூடிய மரங்களை 
 
குளிர் பொறுத்தேனும் 
விட்டு வைத்திருக்க விரும்புகிறேன். 
இயற்கையின் முன் 
மண்டியிடுபவனாகவே இருந்துவிடுகிறேன். 
என் தலைமீது 
இயற்கையின் பாதமிருக்கட்டும்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்