நட்பு

11 ஆவணி 2012 சனி 12:52 | பார்வைகள் : 14898
மெளனயாய் இருந்த
என் அழைபேசி
நீண்ட காலத்தின் பின்
சலசலக்க தொடங்கியது இன்று
தொலை தூரத்தில்
இருந்து ஓர் அழைப்பு,
அன்பாய் நலன் விசாரிப்பு
உரிமையாய் ஒரு அதட்டல்
கபடமில்லா நகைச்சுவைகள்
பேதமின்றிய நாட்டு நடப்பு விவாதம்
செல்லமாய் சிறு சண்டைகள்
வாழ்வின் எதிர்காலம்
கடந்த பசுமையான நினைவுகள்
கரைந்து போன கவலைகள்
தொடரும் இன்பங்கள் என
இன்றும் தொடர்ந்தது
நம் நட்பின்
இரு முனைகளிலும்.....
தேசங்கள் பல தாண்டி
உருவங்கள் மாறிச் சென்றாலும்
உயிர் பெற்ற
உண்மை நட்புக்கள்
என்றும் மரணிப்பதில்லை..
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025