பணம்..

27 ஆடி 2012 வெள்ளி 15:57 | பார்வைகள் : 15672
காகிதத்தில் வடித்தி்ட்ட
மூன்றெழுத்து
சொர்க்கத்தில் மூழ்க்கி
குதூகலிக்கிறது
மனித குலம்.
உறவுகளில் உதடுகளில்
புன்னகை மழை பொழிய
கொட்ட வேண்டும்
பண மழை
மரணத்தையும்
பிரசவமாக்கும்
மூன்றொழுத்து
மந்திர வார்த்தை
பணம்..
பணத்திற்காக
உருவங்கள்
பல கொண்டு
வேசம் போடும்
மனித கூட்டம்
பாசம் எனும்
போர்வையில்
போலியாய் சிரித்து
நடிப்புலக நாயகர்களாய்
ஒரு கூட்டம்
காதல் எனும்
போர்வையில்
மனசை விற்கும்
ஒரு கூட்டம்
காமம் எனும்
போர்வையில்
உடம்பை விற்கும்
ஒரு கூட்டம்
வேசங்கள் பல
போடும் மனிதனே!
பணத்திற்கு பேசும்
சக்தி இருந்திருந்தால்
கறி துப்பும் உன்னை
பணத்தினை
படைத்த
பிரமனான உன்னை
கேட்கும் பல கேள்வி
பணத்தின்
மீதான உன்
காதலலை எண்ணி....
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025