நினைவுகள்..

7 ஆடி 2012 சனி 11:16 | பார்வைகள் : 15283
இரவிலும் வருகிறாய்
பகலிலும் வருகிறாய்
அமாவாசையிலும் வருகிறாய்
பெளர்ணமியிலும் வருகிறாய்
குளிரிலும் வருகிறாய்
உடல் எரிக்கும்
வெப்பத்திலும் வருகியாய்
சில நேரங்களில்
இன்பம் தருகிறாய்
பல நேரங்களில்
கண்ணீரை தருகிறாய்
நீ யார் என கேட்டால்,
மெளனமாய் சிரிக்கிறாய்,
இம்சைகள் பல கொடுத்து
வஞ்சிக்கும் உன்னை
கொலை செய்ய எண்ணுகிறேன்
ஆணவமாய் சிரிக்கிறாய்,
மரணமில்லாதவன்
நான் தான் உன்
நினைவுகள் என்று.....
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025