இயற்கையும், நீயும்..

23 பங்குனி 2012 வெள்ளி 15:58 | பார்வைகள் : 15661
அதிகாலை
சூரிய ஒளியில்,
லேசாக வீசும் காற்று
பனித்துளிகளில் உரசலில்
துளிரும் பூக்கள் போன்று
அரங்கேறுகின்றது
உன்னோடான காதல்.
கண் நோக்கும்
இடமெங்கும்
பரந்தே கிடங்கும்
பசுமை நிறைந்த
வயல்வெளிகள் போல்
நீண்டே செல்கின்றது
உன் நினைவுகள்..
நந்தவனமெங்கும்
நாணத்துடன் சிரிக்கும்
பூக்கள்
சுண்டி இழுக்கின்றன
உன் கண்களை போல்..
தென்றலில் மிதந்து
அசைந்தாடும் மரங்கள் போல்
உன் கொடியிடை நடை..
ஓராயிரம் நட்சத்திரங்கள்
கூடி நின்று
கும்மாளம் போடுவதாய்
உன் புன்னகை..
இப்படி நீண்டே
செல்கின்றது
இயற்கையின் ஒட்டத்தில்
நீழலாய் ஆடுகின்றது
உன் நினைவுகளும் சேர்ந்து.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025