Paristamil Navigation Paristamil advert login

உன் முகம் காண...

உன் முகம் காண...

9 ஆடி 2014 புதன் 18:23 | பார்வைகள் : 9827


விழி நீர் பெருக
சங்கடம் எனை ஆழ்த்துகிறது
வித்திட காதல்
விதவையானதால்
பசி பட்டினி அறிந்தவன்
பாவையவள்
எண்ணங்களை புரியாததால்
பரிதவித்து நிற்கிறான்
மனமோ தவிக்கிறது
மாற்றான் தோட்டத்து
மல்லிகையா நீ
மன்றாடி நான் கேப்பது எல்லாம்
மாயமான வாழ்வில்
[மறு] ஒரு முறையேனும் உன்
முகம் பார்த்திட வேண்டுமென்று
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்