Paristamil Navigation Paristamil advert login

உயிர் துடிக்குதடி..

உயிர் துடிக்குதடி..

2 வைகாசி 2014 வெள்ளி 14:21 | பார்வைகள் : 9776


பனிமலையில் சாரல் தூவுதே
துயரத்தின் வலியில் பேசுதே
விழிகளின் விம்பம் மீதிலே
இடிந்து (நொருங்கி) வீழ்ந்தது மனசு 

வார்த்தையில் வாசம் வீசுமா
மௌனத்தின் சத்தம் கேட்குமா
என்னோடு நீயும் பேசவே
காத்திருக்குமா பொழுது

பூக்களின் மொழியிலே - புல்லாங்குழல்
இசை பாடிப் பாடி மகிழுதே
வண்ணத்து பூச்சியெல்லாம் - வானவில்லில்
கோலம் போட்டு போட்டு சுத்துதே (தடி)

எந்தன் நெஞ்சுக்குள்ளே தீக்குச்சியாய்
எனை வாட்டி வாட்டி தீ மூட்டுகிறாய்
தனிமையின் கொடுமை தாக்கவே - ஏனடி
வலிகளில் விஷத்தை ஊற்றுகிறாய்

இது மரணமோ இல்லை ஜனனமோ
வலிகள் தான் பதில் சொல்லுமோ

நேசத்தால் சிலுவையில் அறைந்துவிடு – நீ
சுவாசித்தால் என்னைத் தூக்கிலிடு
கனவிலே தோன்றினால் ஆழக்
கல்லறையில் எனை புதைத்துவிடு
அடிநெஞ்சில் முள்ளானால் - ரோஜா
செடியில் என்னை கொழுவி விடு

மௌனப் பொழுதுகளில் உயிர் துடிக்குதடி
பார்க்கும் தூரத்தில் நிலா விழுகிறது.

- எஸ்வீஆர்.பாமினி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்