Paristamil Navigation Paristamil advert login

உடைந்த கடவுள்

 உடைந்த கடவுள்

12 மாசி 2013 செவ்வாய் 17:30 | பார்வைகள் : 10066


 

அன்றெல்லாம்
சுடுகாட்டில் இருக்கும்
வெட்டியான்களை எல்லாம்
விட்டுவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை
பேய் தின்று விடுமோ என்றே 
பயம் வரும்;

இன்றும் அதே பயம்
வீடு சுற்றி
நாடு சுற்றி
மனசாட்சியை கொன்றுகொண்ட
பேய்களே உலவுகிறது;

சுடுகாடே -
மேல்போல்!!
வாழ்க்கை
வெங்காயம் போல்
என்றார் யாரோ;

உரிக்க உரிக்க
கண்ணீராம்.
உரிபடுவதேயில்லை
இப்போதெல்லாம்
நிறைய பேரின் வாழ்க்கை;

வெங்காயம் என்று
வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில்
கண்ணீர் மட்டும் மிட்சம் போல்.
என்னை கேட்டால்
வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள்
வாழுங்கள் என்பேன்!!

நிறைய வீடுகளில்
நிறைய அறைகள்
புழக்கமின்றியே கிடக்கிறது;

வீடற்று இருப்பவர்களை பற்றி
அந்த அறைகளுக்கு
எந்த கவலைகளும் இல்லை,
தெருவில் உண்டு
உறங்கி
புணர்ந்து
தலைமுறைகளை கடக்கும்
ஒரு சாமானியனின் தேவை
நான்கு சுவர் மட்டுமே என
அந்த -
வெற்றுக் கட்டிடமான
கல் மண் கலவைகளுக்குப்
புரிவதேயில்லை!

எனக்குத் தெரிந்து
கல் சுமக்கும்
பீடி சுற்றும்
உணவகத்தில் மேசை துடைக்கும்
பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும்
தேநிர்கொண்டு வந்து கொடுக்கும்
சிறுவர்களின் வியர்வையில் தான்
நசுக்கப் படுகின்றது
நம் தேசத்தின்
முன்னேற்றத்திற்கான விதைகள்!

-வித்யாசாகர்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்