பழங்கால ஐந்து கேன்டர்பெர்ரி பேராயர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!
17 சித்திரை 2017 திங்கள் 06:19 | பார்வைகள் : 9333
லண்டனில் ஓர் இடைக்கால தேவாலயத்தை கட்டடப் பணியாளர்கள் மறுசீரமைத்த போது, ஐந்து எஞ்சிய கேன்டர்பெர்ரி பேராயர்களின் உடல்கள் பல நூற்றாண்டுகளாக நிலவறை ஒன்றில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
லாம்பெத் அரண்மனையில் பக்கத்தில் உள்ள பழங்கால தேவாலயத்தில் அவர்களது உடல்கள் முப்பது முன்னணி சவப்பெட்டிகளுடன் இருந்தது கண்டறியப்பட்டது.
ஏஞ்சலிகன் தேவாலயத்தின் ஆன்மீகத் தலைவரின் அதிகாரப்பூர்வ லண்டன் இல்லமாக லாம்பெத் அரண்மனை விளங்கி வருகிறது.
ஐந்து பேராயர்களின் உடல்களில் ஒருவரது உடல் பேன்கிராஃப்ட் பேராயரின் உடலாகும்.
1611 ஆம் ஆண்டு ஜேம்ஸ் அரசர் வெளியிட்ட பைபிளை மேற்பார்வையிட்டவர் இவர்.