Paristamil Navigation Paristamil advert login

குழந்தையின் அறிவுமட்டம் விருத்தியடைய காரணம் என்ன?

குழந்தையின் அறிவுமட்டம் விருத்தியடைய காரணம் என்ன?

10 ஐப்பசி 2016 திங்கள் 19:15 | பார்வைகள் : 9601


 குழந்தைகள் பிறந்தது முதல் அறிவாளிகளாக வளர்வதும் அல்லது அறிவு குறைந்தவர்களாக மாறுவதும் அவர்களுடைய தாயாரின் மரபணுவை பொருத்துள்ளதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
தாயாருக்கு X வகை குரோமோசோம் இரண்டு உள்ளதால் அவர்கள் எளிதில் அறிவை உற்பத்தி செய்யும் மரபணுக்களை தங்களுடைய குழந்தைகளுக்கு அனுப்புகின்றனர்.
 
ஆனால், இந்த X வகை குரோமோசோம் தந்தைக்கு ஒன்று மட்டுமே இருப்பதால் அவர்களால் அறிவை உற்பத்தி செய்யும் மரபணுக்களை குழந்தைகளுக்கு அனுப்ப முடியாது.
 
அதாவது, குழந்தை அறிவாளியாக வளர்வதும் அல்லது அறிவு குறைந்தவர்களாக வளர்வதும் தாயின் மரபணுவை பொருத்து தான் உள்ளது.
 
இதில், தந்தை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
 
எனினும், தந்தை மூலம் அறிவு மரபணுக்கள் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்டாலும் அவை குழந்தைகள் வளர்ச்சி அடையும்போது தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
அதேசமயம், குழந்தைகள் அறிவாளிகளாக வளர்வதற்கு சுமார் 60 சதவிகிதம் தாயாரின் மரபணு காரணமாக இருந்தாலும் கூட, எஞ்சிய 40 சதவிகிதம் குழந்தை எந்த சூழலில் வளர்கிறது என்பது பொருத்து அமையும் எனவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்