Paristamil Navigation Paristamil advert login

மதுபான விடுதியில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் பலி - எட்டு பேர் கைது

மதுபான விடுதியில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் பலி - எட்டு பேர் கைது

9 புரட்டாசி 2023 சனி 05:11 | பார்வைகள் : 4564


மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் ஒருவர்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

 

Solliès-Pont (Var) நகரில் இச்சம்பவம் கடந்த ஓகஸ்ட் 27 ஆம் திகதிஇடம்பெற்றிருந்தது. அங்குள்ள இரவு நேர மதுபான விடுதி ஒன்றில் மதுஅருந்திக்கொண்டிருந்த இராணுவ வீரர் ஒருவக்கும் ஏனைய சிலருக்கும் இடையேவாக்குவாதம் எழுந்தது. பின்னர் அது மோதலாக வெடித்தது.  காலை 5 மணிஅளவில் இராணுவ வீரர் அவர்களால் தாக்கப்பட்டார்.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர், செப்டம்பர் 1 ஆம் திகதிசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  உடற்கூறு பரிசோதனைகளில்இரத்தக்கசிவினால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதையடுத்து, மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட எட்டுபேரினை செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் காவல்துறையினர் கைது செய்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்