Paristamil Navigation Paristamil advert login

'திருக்குறளை எழுதியது யாரு'...?

'திருக்குறளை எழுதியது யாரு'...?

18 தை 2021 திங்கள் 17:22 | பார்வைகள் : 9515


1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
"நாய்கிட்டதான் கேக்கணும் "
"அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"
2) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
"அப்புறம்"
அப்புறம் என்ன........
காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!
3) "சார், என்ன இது ?"
"கொஸ்டீன் பேப்பர்"
"சார், இது என்ன?"
"ஆன்சர் பேப்பர்"
"என்ன ஒரு அக்கிரமம் சார்,
கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,
ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!
4) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"
5)""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
"கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"
6) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
"அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"
7) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே"
"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்