Paristamil Navigation Paristamil advert login

கண்ணாடி கேட்ட முதலாளி...!

கண்ணாடி கேட்ட முதலாளி...!

29 மார்கழி 2020 செவ்வாய் 14:50 | பார்வைகள் : 10009


முதலாளிக்கும், முட்டாள் தொழிலாளிக்கும் நடந்ததாக ஒரு நகைச்சுவை நிகழ்வு
 
முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.
 
'' கண்ல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி கோபத்தில்...
 
''யோவ் ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம் தெரியுற மாதிரி ஒன்னு வாங்கி வா...'' என்று அனுப்பி வைத்தார்.
 
வேலைக்காரன் திரும்பி வரவே இல்லை... நீண்ட நேரத்திற்கு பின் மூச்சுவாங்க வெறுங்கையோடு வந்த வேலைக்காரனிடம் ஏன் கண்ணாடி வாங்கலன்னு கேட்டார் முதலாளி...
 
'' பஜார் முழுக்க அலைஞ்சேன் முதலாளி... ஆனாலும் நீங்க கேட்ட மாதிரி கண்ணாடி கிடைக்கல அதுதான் வாங்கல';
 
'' ஏன்... பெருசாவா இருந்தது..?
 
'' இல்ல, சின்னதாதான் இருந்தது...''
 
'' பிறகு ஏன் வாங்கல ...?
 
'' எல்லா கண்ணாடியிலும் என் முகம்தான் தெரிஞ்சிது. அதான் வாங்கல...''

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்