Paristamil Navigation Paristamil advert login

கடைசிவர கல்யாணமே நடக்காதோ?

கடைசிவர கல்யாணமே நடக்காதோ?

12 தை 2015 திங்கள் 06:47 | பார்வைகள் : 8998


 சோகமே வடிவாய் இருந்த அருணை பார்த்து நண்பன் கேட்டான் ஏம்ப்பா சோகமா இருக்கிறாய் என்று. அதன்பிறகு இரு நண்பர்களும் பேசிக் கொண்டது இதைத்தான். 

 
அருண்: எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க வீட்ல எந்த முயற்சியும் எடுக்க மாட்டேங்கிறாங்க. என்னோட கேர்ள் பிரண்ட்சுல யாரையுமே எங்கம்மாவுக்கு பிடிக்க மாட்டேங்குது, அதாம்ப்பா சோகம். 
 
அசோக்: சரி உங்கம்மாவுக்கு எந்த மாதிரி பொண்ணுதான் பிடிக்குமாம். கேட்டு பார்த்தியா? 
 
அருண்: கேக்காம இருப்பேனா.. அதையும் கேட்டேனே.. எங்கம்மாவுக்கு தன்னை மாதிரியே கேரக்டர் உள்ள பொண்ணுதான் மருமகளா வரணும்னு ஆசையாம். 
 
அசோக்: உனக்குதான் உங்கம்மா கேரக்டர் நல்லா தெரியுமே. அவங்கள மாதிரி ஒரு பொண்ணை கண்டுபிடிக்கிறது ஈஸி தானப்பா. 
 
அருண்: அந்த கொடுமைய ஏம்ப்பா கேக்குற. எல்லா வகையிலையும், எங்க அம்மா மாதிரி குணம் உள்ள பொண்ணை கூட்டிட்டு போய் காட்டினேன்ப்பா. எங்க அம்மாவும் பேசிப்பார்த்துவிட்டு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. 
 
அசோக்: சூப்பர் மச்சி. அதுசரி... இது சந்தோஷமான விஷயமாச்சே. அப்புறமும் ஏன் சோகமாக இருக்கேன்னுதான கேக்குறேன். 
 
அருண்: அம்மாவ மாதிரி கேரக்டருங்கிறதால அந்த பொண்ணை சுத்தமா புடிக்கலைன்னு எங்கப்பா சொல்லிட்டாருப்பா. இனி காலம் முழுசும் எனக்கு பொண்டாட்டியே அமையாது போல இருக்கு. அதான்ப்பா சோகம். 
 
அசோக்: ??? 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்