Paristamil Navigation Paristamil advert login

இவரு கொஞ்சம் சீக்கிரமாவே கிழவனாயிட்டாரு...

இவரு கொஞ்சம் சீக்கிரமாவே கிழவனாயிட்டாரு...

14 கார்த்திகை 2014 வெள்ளி 16:01 | பார்வைகள் : 9320


 சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற வயதான பெண்மணி பூங்காவில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவள் அருகே மற்றொரு வயதான ஆண் வந்தமர்ந்தார். இருவரும் புன்னகைத்த படியே பேச ஆரம்பித்தார்கள் இப்படி....

 
 பெண் : உங்களப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்குறிங்களே.. இந்த சந்தோஷத்திற்கான காரணத்தைச் சொல்வீர்களா..? 
 
ஆண் : சரி சொல்கிறேன். கேளுங்கள்....
 
ஆண் : ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன்... 
 
பெண் : அப்படியா...  
 
ஆண் : கணக்கில்லாமல் விஸ்கி குடிக்கிறேன்... 
 
பெண் : ஓஹோ....  
 
ஆண் : அளவில்லாமல் சாப்பிடுவேன்... எக்ஸர்சைஸ்ஸும் செய்ய மாட்டேன்... 
 
பெண் : பரவாயில்லயே... இவ்வளவு ஒழுங்கீனமாக இருந்தும் இவ்வளாவு மகிழ்ச்சியாக இருக்கிறீகளா..? ஆச்சர்யமான விஷயம் தான்!!!    
 
ஆண் : சரி, இவ்வளவு கூறினேனே என் வயது என்ன என்று கேட்டீர்களா..? 
 
பெண் : சொல்லுங்கள்...  
 
ஆண் : நேற்றோடு 25 வயது பூர்த்தியாகியுள்ளது.... 
 
பெண் : ............???????!!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்