Paristamil Navigation Paristamil advert login

சார் தப்பா நினைக்கப் போறார்......

சார் தப்பா நினைக்கப் போறார்......

21 ஐப்பசி 2014 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 9342


 பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

வழியில் அவர்கள் எவ்வாறுப் பேசிக் கொள்கிறார்கள் பாருங்கள்....
 
ராமு : எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல்லடா....
 
சோமு : ஆமாடா..
 
ராமு : கொஸ்டீன் பேப்பரை வாங்கவும் எனக்கு மயக்கமே வந்துடுச்சி....
 
சோமு : எனக்கும் தாண்டா....
 
ராமு : ஒரு கேள்விக்கும் பதில் தெரியலை.... என்னடா பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன்
 
சோமு : அப்புறம்...?
 
ராமு : வேறென்ன செய்ய...வெறும் பேப்பரை மடிச்சு சார்கிட்ட குடுத்துட்டு வந்துட்டேன்....
 
( ராமுவின் பதிலைக் கேட்டு அதிர்ந்து போகிறான் சோமு)
 
சோமு : என்னடா இப்டி பண்ணிட்ட...?
 
ராமு : ஏண்டா...என்னாச்சு...?
 
சோமு : நானும் பதில் தெரியாம வெறும் பேப்பரை மடிச்சுத் தான் கொடுத்துட்டு வந்திருக்கேன்...
 
ராமு : சரி, அதனால என்ன...?
 
சோமு : என்னடா விவரமில்லாமப் பேசற, நாம ரெண்டு பேரும் காப்பி அடிச்சிருப்போம்னு சார் நினைக்க மாட்டாரா....
 
ராமு : ????
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்