Paristamil Navigation Paristamil advert login

வாயில்லா ஜீவன்..!

வாயில்லா ஜீவன்..!

15 வைகாசி 2014 வியாழன் 18:55 | பார்வைகள் : 9484


தாயும் மகனும் ஒரு ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்துக்குச் சென்றிருந்தனர்.

அந்தப் பெண் மிகவும் விலை உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத் தேர்வு செய்தாள். இதைப் பார்த்த மகன் சொன்னான்..

அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை வாங்குவதன் மூலம் உன்னை அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரிய, வாயில்லா ஜீவனுக்கு தீங்கு இழைக்கிறாய்..!

அதற்கு அந்த அம்மா சொன்னார்,

கவலைப்படாதே மகனே.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக செலுத்த வேண்டியதில்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..!

மகன் ????

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்