Paristamil Navigation Paristamil advert login

பழைய நினைப்புடா பேராண்டி......

பழைய நினைப்புடா பேராண்டி......

17 தை 2014 வெள்ளி 16:25 | பார்வைகள் : 9953


 உங்க காலத்து பருப்பெல்லாம் இப்ப வேகாது தாத்தா... பூங்காவில் அமர்ந்து தாத்தாவும், பேரனும் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்... 

 
தாத்தா: அந்தக் காலம் மாதிரி வராதுடா பேராண்டி.... 
 
பேரன்: ஏன் தாத்தா...?
 
தாத்தா : அந்தக் காலத்துல என்னை கடைக்குப் போகச் சொல்லி எங்கம்மா என் கையில ஒரு ரூபாய் தான் கொடுப்பாங்க... 
 
பேரன் : சரி....  
 
தாத்தா : நா அதுக்குள்ளயே அரிசி, புளி, காய்கறி, பழம் எல்லாம் வாங்கிட்டு, கடைசியில சாக்லேட்டும் வாங்கி சாப்பிடுவேன்... 
 
பேரன் : அப்படியா..
 
தாத்தா : ஆமாண்டா... இப்பச் சொல்லு, இதெல்லாம் இந்தக் காலத்துல நடக்குமானு...? 
 
பேரன் : நிச்சயமா முடியாது தாத்தா, இப்பத்தான் எல்லாக் கடையிலயும் கேமரா வச்சுருக்காங்களே... திருடுனா காட்டிக் கொடுத்துடும்... 
 
தாத்தா : ????
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்