Paristamil Navigation Paristamil advert login

அநியாயமா என்னை பூமியில வாழ வச்சுட்டியே அலமேலு...

அநியாயமா என்னை பூமியில வாழ வச்சுட்டியே அலமேலு...

21 ஐப்பசி 2013 திங்கள் 10:24 | பார்வைகள் : 9950


 மிகவும் நல்ல உணவுப் பழக்கவழக்கத்தோடு வாழ்ந்த தம்பதிகள் அவர்கள். விபத்து ஒன்றில் சிக்கி அநியாயமாகப் பலியானார்கள். நேரே சொர்க்கம் சென்ற தம்பதிகள் என்ன பேசிக் கொள்கிறார்கள் பாருங்கள்....

சொர்க்கத்தில் நுழைகிறார்கள் கணவனும், மனைவியும்... அழகிய அரண்மனையும், அதனைச் சுற்றிய தோட்டமும் அவர்களுக்கு ஒதுக்கப் படுகிறது.

அருகில் உள்ள கோல்ப் மைதானத்தில் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. அந்த கோப்ல் மையத்தில் 24 மணி நேரமும் அளவில்லாத மது சப்ளை செய்யப் படுகிறது.

வீட்டிற்கு அருகிலேயே அழகிய தங்கக் கடற்கரை. அதன் கரையில் அரைகுறை உடைகளுடன் உலாவும் மங்கைகள்...

விழி விரிய இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கணவன், மனைவியிடம் திரும்பி இப்படிக் கூறுகிறான்.... அடிப்பாவி, அநியாயமா நல்லச் சாப்பாடு போட்டு இத்தன வருஷம் பூமியில வாழ வச்சுட்டயே... இல்லாட்டி இருபது வருஷத்துக்கு முன்னாடியே நா இங்க வந்துருப்பேன்.... ...........???

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்