Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கோர விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு நீதவான் வெளியிட்ட உத்தரவு

இலங்கையில் கோர விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு நீதவான் வெளியிட்ட உத்தரவு

11 ஆடி 2023 செவ்வாய் 03:14 | பார்வைகள் : 4446


பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதியை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர் இன்று பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்த 41 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

வர்த்தக‌ விளம்பரங்கள்