கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான தங்க முட்டை

9 புரட்டாசி 2023 சனி 09:51 | பார்வைகள் : 9740
கடலின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மர்மமான 'தங்க முட்டை' விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பொருள் முதன்முதலில் ஒகஸ்ட் 30 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அது என்ன என்பதைக் கண்டறிய இன்னும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இது அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் (NOAA) இயக்கப்படும் படகில் இருந்த கடல் உயிரியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில், இந்திய உயிரியலாளர்கள் குழுவானது, கண்டுபிடிக்கப்பட்ட பொருள் என்ன அல்லது அது எங்கிருந்து வந்தது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டது, மேலும் அதனை "தங்க உருண்டை" என்றும் "ஒரு முட்டை உறை" என்றும் விவரித்துள்ளது.
NOAA தற்போது அலாஸ்காவிற்கு அருகிலுள்ள கடலின் ஆழத்தை ஆராய்வதற்காக ஐந்து மாத பயணத்தில் உள்ளது.
48 நிபுணத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவினர், கடலில் ஆய்வு செய்வதற்காக, 6,000 மீட்டர் ஆழம் வரை இயங்கக்கூடிய கமெராக்கள் உட்பட சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) என்பது அமெரிக்க அரசாங்கத் துறையின் ஒரு பகுதியாகும்.
மேலும் வானிலை கண்காணிப்பு, ஆழ்கடல் ஆய்வு மற்றும் அமெரிக்காவில் உள்ள கடல் பாலூட்டிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் பாதுகாப்பை நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
தெற்கு அலாஸ்காவின் கடற்கரையில் இருந்து 250 மைல் தொலைவில் நீருக்கடியில் அழிந்துபோன எரிமலையைப் பார்க்க சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, குழுவினர் தங்கள் விசித்திரமான கண்டுபிடிப்பை மேற்கொண்டனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மர்மப் பொருளின் படம், தங்கக் கடற்பாசி போன்ற குமிழியைக் காட்டுகிறது.
அதில் "ஏதோ உள்ளே நுழைய அல்லது வெளியேற முயற்சித்தது" என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறினார்.
தண்ணீருக்கு அடியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனத்தைப் பயன்படுத்தி, முட்டை போன்ற குமிழியை அசைத்துள்ளனர்.
மேலும் அது தோலைப் போன்ற அமைப்பில் மென்மையாக இருப்பதைக் கண்டறிந்தது.
இந்த விசித்திரமான பொருளை ஆய்வகத்தில் சோதிப்பதற்காக, ரிமோட் வாகனத்தைப் பயன்படுத்தி ஒரு குழாயின் மூலம் மெதுவாக உறிஞ்சி எடுத்துள்ளனர்.
பளபளப்பான பொருள் என்ன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது சோதனைகள் மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்வு நடத்தி வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1