Paristamil Navigation Paristamil advert login

டிஜிட்டல் படை­யெ­டுப்பா...?

டிஜிட்டல் படை­யெ­டுப்பா...?

27 ஆவணி 2023 ஞாயிறு 11:30 | பார்வைகள் : 3672


இலங்கை மீது இந்­தியா டிஜிட்டல் படை­யெடுப்பை மேற்­கொள்­கி­றதா என்ற சந்­தே­கத்தை எழுப்­பி­யி­ருக்­கி­றது முன்­னிலை சோஷ­லிசக் கட்சி.
 
அந்தக் கட்­சியின் கல்விச் செய­லாளர் புதுது ஜாகொட கண்­டியில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் இது­ கு­றித்த சில அடிப்­படைச் சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருந்தார்.
 
இலங்கைக் குடி­மக்கள் அனை­வ­ருக்கும் வழங்­கப்­பட­வுள்ள இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டையை தயா­ரிக்கும் ஒப்­பந்தம், இந்­திய நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­ப­டு­வதை ஒட்­டியே, இந்தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
 
2013இல் இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்டை வழங்கும் பணி­களை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருந்­தது.
 
அப்­போது அந்த ஒப்­பந்தம் பாகிஸ்­தானின் தேசிய தரவு மற்றும் பதிவு அதி­கா­ர­ச­பைக்கு வழங்­கப்­பட்­டது.
 
அதன்­பின்னர் தர­வு­களை ஒழுங்­க­மைத்து இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அறி­விப்­புகள் வெளி­யி­டப்­பட்­டன.
 
ஆனால், அந்த திட்டம் பின்னர் கைவி­டப்­பட்­டது. அப்­போது, பாகிஸ்தான் நிறு­வ­னத்­திடம் இலங்­கை­யர்­களின் தனிப்­பட்ட தர­வுகள் சிக்கப் போகி­றது என்றோ, இதனால் தேசிய பாது­காப்பு ஆபத்­துக்கு உள்­ளாகும் என்றோ எந்தக் கட்­சியும் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை.
 
இப்­போது இந்­தி­யாவின் மெட்ராஸ் செக்­யூ­ரிட்டி பிரின்டேர்ஸ் நிறு­வ­னத்­துக்கு இந்த ஒப்­பந்தம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது என்ற நிலையில்தான், இந்­தி­யாவின் டிஜிட்டல் கொல­னி­யாக இலங்கை மாறப் போகி­றது என்றும், இந்­தி­யாவின் டிஜிட்டல் படை­யெ­டுப்பு என்றும் சில கட்­சிகள் எதிர்க்கத் தொடங்கி விட்­டன.
 
ஒரு நாட்டின் தர­வுகள் இன்­னொரு நாட்டின் கையில் கிடைக்கும் போது - பாது­காப்பு குறை­பா­டுகள் ஏற்­ப­டு­வது வழக்கம் தான்.
 
இலங்­கை­யர்­களின் தர­வு­களை ஒருங்­கி­ணைக்கும் போது, அமெ­ரிக்க நிறு­வ­ன­மாக இருந்­தாலும் சரி, சீன நிறு­வ­ன­மாக இருந்­தாலும் சரி, இந்­திய நிறு­வ­ன­மாக இருந்­தாலும் சரி- பாது­காப்பு மீறல் இருக்கத் தான் செய்யும்.
 
தனிப்­பட்ட தர­வு­களைத் திரட்டும், எந்­த­வொரு புல­னாய்வு அமைப்பும், கிடைக்­கின்ற எல்லா வாய்ப்­பு­க­ளையும் பயன்­ப­டுத்தி தர­வு­களைத் திரட்டிக் கொள்ளும். எதையும் விட்டு வைக்­காது.
 
எனவே, இந்­திய நிறு­வனம் இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டைக்­கு­ரிய தர­வு­களைச் சேக­ரிக்கும் போது, அவை இந்­திய புல­னாய்வு அமைப்­பு­களால் பயன்­ப­டுத்­தப்­ப­டாது என்று உறுதி கூற முடி­யாது. அவ்­வாறு நம்­பிக்கை கொடுக்­கப்­பட்டால் அது பொய்­யா­னது.
 
இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்டை  தனி­நபர்­களின் முக அமைப்பு, கைவி­ரல்­களின் ரேகை அமைப்பு, கண்­விழி அமைப்பு உள்­ளிட்ட உயி­ரியல் தர­வு­க­ளையும் கொண்­ட­தாக இருக்கும்.
 
இந்­தி­யாவில் இத்­த­கைய தரவு திரட்டல் பெரும்­பாலும் நடத்தி முடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
 
ஆதார் அட்டை திட்­டத்தின் மூலம், இந்த தர­வுகள் திரட்­டப்­பட்­டுள்­ளன. படிப்­ப­டி­யாக ஆதார் அட்டை எல்லா செயல்­மு­றை­க­ளுக்­கு­மான அத்­தி­யா­வ­சிய தேவை­யாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.
 
வங்கிக் கணக்­குகள் தொடக்கம், அரச அலு­வல்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, நகைகள், காணிகள், வீடு­களின் கொள்­வ­னவு விற்­ப­னை­க­ளுக்கும் கூட, ஆதார் அட்டை அவ­சி­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.
 
எந்தக் கொடுக்கல் வாங்­கல்­க­ளுக்கும் அது பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதும், தனி­ந­பர்­களின் ஆதார் இலக்கம் எல்லா வங்கிக் கணக்­கு­க­ளுக்கும், பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதும், அர­சாங்­கத்­தினால் குடி­மக்­களின் வரு­மானம், செல­வினம், சேமிப்­புகள் போன்ற தர­வு­களை திரட்­டவும், வரு­மான வரி அற­வீட்டை சுல­பப்­ப­டுத்­தவும், உத­வு­கி­றது.
 
வரி ஏய்ப்­பா­ளர்­களை அடை­யாளம் காணவும், சொத்து முறை­கே­டு­களை தடுக்­கவும் இந்த ஆதார் அட்டை முறை பெரு­ம­ளவில் உத­வி­யி­ருக்­கி­றது.
 
இந்­தி­யாவில் ஆதார் அட்டை நடை­முறை கொண்டு வரப்­பட்ட பின்னர் தான், வாக்­காளர் அட்­டைகள் முறைப்­ப­டுத்­தப்­பட்­டன. கட­வுச்­சீட்­டுகள் வழங்­க­லிலும் ஒழுக்க மீறல்கள் தடுக்­கப்­பட்­டன.
 
அதற்கு முன்னர் இந்­தி­யாவில் தேசிய அளவில் எந்த அடை­யாள அட்­டை­யும் இருந்­த­தில்லை.
 
இலங்­கையில் 1970ஆம் ஆண்டில் இருந்து தேசிய அடை­யாள அட்டை வழங்­கப்­ப­டு­கி­றது.
 
ஆனாலும், அதனை தனியே தமி­ழர்­களைப் பிரித்­த­றிந்து அடை­யாளம் காணு­வ­தற்­கான பாது­காப்பு நோக்­கங்­க­ளுக்­கா­கவே பெரும்­பாலும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.
 
இப்­போது தான் அர­சாங்கம் டிஜிட்டல் அடை­யாள அட்­டைகள் மூலம், தர­வுகள் அனைத்­தையும் ஒருங்­கி­ணைத்துப் பயன்­ப­டுத்த முற்­ப­டு­கி­றது.
 
அர­சாங்கம் இந்த திட்­டத்தை 10 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.
 
ஆனால், நிதி ஒதுக்­கீடு உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­களால் அந்த திட்டம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.
 
இப்­போது இந்­திய நிறு­வ­னத்தின் ஊடாக அனைத்து குடி­மக்­களின் தர­வு­க­ளையும் ஒருங்­கி­ணைக்­கவும், இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டை­களை வழங்­கவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
 
இது இலங்­கை­யர்­களின் தனிப்­பட்ட தர­வு­களை இந்­தி­யா­விடம் ஒப்­ப­டைப்­ப­தற்குச் சம­மா­னது தான். விமான நிலை­யங்­களில் உயி­ரியல் தரவு சேக­ரிப்பு கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்த அண்­மையில் அமெ­ரிக்கா உதவ முன்­வந்த போது அதற்கு எதிர்ப்புக் கிளம்­பி­யது நினை­வி­ருக்­கலாம்.
 
இவ்­வா­றான எதிர்ப்­பு­களின் ஊடாக இந்த திட்­டங்­களை நிறுத்தி விட முடி­யாது. ஏனென்றால், இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் பல்­வேறு முன்­னேற்­றங்­களை எட்ட வேண்­டு­மாயின், இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்டை முறை அவ­சியம்.
 
குறிப்­பாக, வரு­மான வரி அற­வீடு, சொத்­துக்கள் விற்­பனை- கொள்­வ­னவு, வங்கிக் கணக்குப் பரி­மாற்­றங்கள் போன்ற, அர­சாங்­கத்தின் வரு­மா­னங்­களில் குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை இந்த இலத்­தி­ர­னியல் அட்­டை­களின் ஊடாக ஏற்­ப­டுத்த முடியும்.
 
இலங்­கை­யர்கள் வரு­மான வரி செலுத்­து­வது மிக­மிக குறைவு என்­பது அண்­மையில் வெளி­யான தர­வு­களின் மூலம் தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.
 
பொரு­ளா­தார நெருக்­க­டிக்குத் தீர்வு காண உதவ முன்­வந்த சர்­வ­தேச நாணய நிதியம், இந்த ஆண்டின் முதல் அரை­யாண்டில் 1300 பில்­லியன் ரூபா வரி வரு­மா­னத்தை திரட்ட வேண்டும் என்று அர­சாங்­கத்­துக்கு நிபந்­தனை விதித்­தி­ருந்­தது.
 
ஆனால், அர­சாங்கம் முதல் அரை­யாண்டில் 1317.05 பில்­லியன் ரூபா (92 வீதம்) வரி வரு­மா­னத்­தையே அடைந்­தி­ருக்­கி­றது.
 
வரு­மான வரி அற­வீட்டுக் குறை­பா­டு­களால் தான் இந்த நிலை காணப்­ப­டு­கி­றது.
 
உள்­நாட்டு இறை­வரித்  திணைக்­க­ளத்தில் 5 இலட்சம் பேரின் கோவைகள் பதிவு செய்­யப்­ப­டுள்ள போதும், 31 ஆயிரம் பேரே வரு­மான வரியைச் செலுத்­து­கின்­றனர். நாட்டில் 1 இலட்­சத்து 5 ஆயிரம் பதிவு செய்­யப்­பட்ட நிறு­வ­னங்கள் உள்ள போதும், 328 நிறு­வ­னங்கள் மட்­டுமே, மொத்த வரு­மான வரியில் 82 வீதத்தை செலுத்­து­கின்­றன.
 
எஞ்­சி­யவை வரி செலுத்­த­வில்லை. அல்­லது வரி ஏய்ப்பில் ஈடு­ப­டு­கின்­றன.
 
இவ்­வா­றான மோச­டி­க­ளுக்கு தீர்வு காண்­பதும், வங்கி சொத்து மோச­டி­களை தடுப்­ப­தற்கும், அர­சாங்­கத்­துக்கு கிடைக்க வேண்­டிய வரு­மா­னங்­களை முறை­யாக அற­வி­டு­வ­தற்கும், ஏனைய நிர்­வாக தேவை­க­ளுக்கும் இந்த இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டைகள் கைகொ­டுக்கும்.
 
இலத்­தி­ர­னியல் அட்­டையை அறி­முகம் செய்­வது பல்­வேறு வழி­க­ளில அர­சாங்­கத்­துக்கு நன்­மையை ஏற்­ப­டுத்தும். விரை­வாக இதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மாயின் வெளி­நாட்டு நிறு­வ­னங்­களை அழைக்கத் தான் வேண்டும்.
 
ஏனென்றால், உள்­நாட்டில் அத்­த­கைய பாரிய தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் இல்லை. டிஜிட்டல் கட்­ட­மைப்பை இலங்கை உரு­வாக்கத் தவறி விட்­டது.
 
உள்­நாட்டில் இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களை பெரியளவில் உருவாக்கத் தவறியது இலங்கையின் பெருங் குறைபாடு.
 
அதேவேளை, வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையினால் தீமைகளும் இருக்கின்றன.
 
குறிப்பாக இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தரவுகள், அந்த நிறுவனங்களிடம் சிக்கி விடும். இலங்கையர்கள் பலருக்கும் தெரியாத சொந்த தகவல்களைக் கூட, அவர்களால் உயிரியல் தொழில்நுட்பங்களின் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 
இது ஒரு வகையில் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தான். இது இலங்கையை இந்தியாவின் டிஜிட்டல் கொலனியாக்கி விடும் என்ற புபுது ஜாகொடவின் கருத்து முற்றிலுமாக நிராகரிக்க கூடியதல்ல.
 
ஆனால், சின்னஞ்சிறிய நாடான இலங்கை, போதுமான டிஜிட்டல் கட்டமைப்புகளை வளர்த்தெடுக்கத் தவறியதற்காக அவ்வாறான இழப்புகளை சந்தித்தே ஆக வேண்டும்.
 
இல்லையேல், பொருளாதார ரீதியாக இடம்பெறும் குற்றங்களையோ, ஏய்ப்புகளையோ தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.
 
நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்